அக்குபஞ்சர் ஓர் அற்புத சிகிச்சை

  • Jan 24, 2018
 
அக்குபஞ்சர் ஓர் அற்புத சிகிச்சை

அடிக்கடி நீண்ட நேரம் விமானப் பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கும், அதிக நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கும் ஏற்படும் புதுவித நோய் `டீப்வெயின் துரோம்போசிஸ்'. இதனை தமிழில் இரத்த உறைதல் நோய் என்று அழைக்கிறார்கள். இந்த நோயிற்கு தற்போது தெற்காசியர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு மற்ற மருத்துவ சிகிச்சை  முறைகளை விட, சீனாவில் தோன்றி ஏனைய நாடுகளுக்கு பரவிய அக்குபஞ்சர் என்ற சிகிச்சை  முறையில் உரிய தீர்வு காண இயலும் என்கிறார் தமிழக நகரான காரைகுடியில் அப்துல்லா மிஷன் மருத்துவமனை அறக்கட்டளையை நடத்தி வருபவரும், அக்கு பஞ்சர் மருத்துவ நிபுணருமான டொக்டர் எஸ். சபீர் அப்துல்லா. அக்குபஞ்சர் முறையில் சிகிச்சையளிப்பது குறித்தும், நிவாரணம் குறித்தும், இந்த சிகிச்சை  முறையினை குறித்தும் ஏராளமான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முதலில் அக்குபஞ்சர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நமது உடலில் இயற்கையாகவே மறைந்துள்ள சில மர்மப் புள்ளிகள் சீர்கெடுவதால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன.  அதாவது நமது உடலில் உள்ள இரண்டு எதிர் எதிர் சக்திகளும் ஒன்றை ஒன்று நிறைவு பெறும் சமநிலைகெடும்பொழுதுதான் நோய்கள் உண்டாகின்றன. அந்த மர்மப் புள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றை சிறு ஊசிகள் துணைகொண்டு, மருந்து இல்லாமல் தூண்டி, அவற்றை இயக்க வைத்து, நோயை குணமாக்குவதே `அக்குபஞ்சர்\' சிகிச்சை  முறையாகும்.

இந்த சிகிச்சை முறையில், நோயாளியின் நாடியைப் பரிசோதனை செய்து, நோயின் தன்மையை ஓரிரு நிமிடங்களில் எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும். ஒன்று அல்லது இரண்டு ஊசிகள் தான் போடப்படும். நிச்சயமாக வலியே இருக்காது. ஊசி போடும்போது தோலில் ஏதோ ஒன்று வைக்கப்படுவது போலத்தான் உணருவீர்கள்.

ஊசியைச் செருகியதும் சிறிது நேரம் கழித்து அங்கு ஏதோ ஒன்று இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படும். இந்த உணர்வானது எவ்வளவு நேரம் நமக்குத் தெரிகின்றதோ அதுவரை இருக்கவேண்டும். சிலருக்கு 5 முதல் 30 நி மிடங்கள் வரையும் சிலருக்கு அதற்கு மேலும் ஆகலாம். ஓரிரு முறை வைத்தியத்திற்குப் பிறகு நோயின் தீவிரத்திலிருந்து விடுபடுவதை உணர்வீர்கள். 60 ச தவீதம் முதல் 70 ச தவீதம் நோயிலிருந்து நி வாரணம் கிடைக்கும் வரை வைத்தியம் மேற்கொண்டாலே போதுமானது. மீதமுள்ள நோயின் தீவிரம் தானே மறைந்துவிடும். ஒரு சிலருக்கு ஆரம்பித்த அன்றே குணம் தெரியும். வெகு சிலருக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து திடீரென்று மாறுதல்கள் தெரிய ஆரம்பிக்கும். இம்முறையில் சிகிச்சை  எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டால் மருந்துகளை நி றுத்தி விடுவது நல்லது. ஆனால் நீ ண்ட நாட்களாக பழக்கப்பட்டவர்கள் படிப்படியாக வைத்தியம் ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நி றுத்திவிடலாம்.

இந்த முறை சிகிச்சை யின் போது நோயாளிக்கு நாங்கள்பத்தியங்கள் எதனையும் பரிந்துரைப்பதில்லை. மேலும் இம்முறை சிகிச்சை யினால் பக்க விளைவுகள் ஏற்பட ச ாத்தியமே கிடையாது. நோய் குணமாகும். நல்ல விளைவுதான் ஏற்படும். இந்த சிகிச்சை  முறை மூலம் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்த முடியும். அதே தருணத்தில் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரையில் எந்த வயதினருக்கும் இந்த சிகிச்சை  பலன் அளிக்கும். குழந்தைகளுக்கு பொதுவாக மஸாஜ் செ ய்வது ஒன்றே போதுமானது. அவர்களுக்கு ஊசி குத்த வேண்டிய அவசியமில்லை. அத்துடன் நோயாளி விவரிக்கின்ற பாதிப்பை விட மறைந்து கிடக்கிற சிக்கல்களையும் இந்த சிகிச்சை யின் மூலம் குணப்படுத்த இயலும். இதுவே இதன் சிறப்பம்சம் என்று கூட சொல்லாம்.

1. அதிகப்படியான தூக்கம்
2. தூக்கத்தின்போது அடிக்கடி கனவுகள்
3. தூங்கி எழும்போது சுறுசுறுப்பின்மை
4. அசதி, தூங்கவேண்டும்போல இருக்கும். ஆனால் படுத்தால் தூக்கம் வராது.
5. சிறு சத்தமும் தூக்கத்தைக் கலைத்து விடும்.
6. தூக்கத்தின் நடுவில் முழித்துவிட்டால் திரும்ப தூக்கம் வராது.
7. தூங்கி எழுந்ததும் தலைவலி
8. பசியில்லாமை
9. கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி பசி எடுத்துக்கொண்டே இருக்கும்.
10. சாப்பிட்டதும் வயிறு அடைத்தது போன்று இருத்தல்
11. சாப்பிட்டதும் வயிற்றில் கல்லைப் போட்டது போன்ற உணர்வு
12. சாப்பிட்டதும் மலஜலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு
13. சாப்பிட்டதும் தூக்கம் வருதல்

இவை யாவும் உடனே தீர்க்க வேண்டும். இல்லையெனில் 5 அல்லது 10 வருடங்களில் குறிப்பிட்ட உறுப்பில் நோயானது வளர்ந்துவிடும்.

பெரும்பாலோனவர்களுக்கு இந்த சிகிச்சை  முறை மூலம் மன நோயினை குணப்படுத்த இயலுமா? என்ற சந்தேகம் இருக்கிறது. இவ்விடயத்தில் எம்மால் உறுதியாக ஒன்றை கூற இயலும், அக்குபஞ்சர் மூலம் மன நோயினை குணப்படுத்த முடியும்.

நன்றாகப் பசித்திருக்கும் ஒருவருக்கு சாப்பிடுவதற்கு முன் துக்ககரமான செய்தி சொல்லப்பட்டால் உடனே பசி அடங்கி விடுகின்றது. மற்ற உறுப்புக்களான இருதயம், நுரையீரல், சிறுநீ ரகம் போன்ற அனைத்து உறுப்புகளும் வேலை செய்துகொண்டு இருக்கும்பொழுது வயிற்றின் இயக்கம் மட்டும் முழுமையாக அடங்கிவிடுகின்றது. அதாவது துக்கம், கவலை போன்ற மனக்கஷ்டங்கள் வயிற்றின் இயக்க குறைவினால் ஏற்படுகின்றது.

இதைப்போலவே, துக்கம் நெஞ்சை  அடைக்கும். தேம்பித் தேம்பி அழும்போது நெஞ்சு குலுங்கும். மூச்சுவிட முடியாது. எனவே, துக்கமும், அதிகமாக அழக்கூடிய மனோபாவமும் நுரையீரல் பலவீனத்தால் ஏற்படுகின்றது. சிறுவர்களைப் பயமுறுத்தினால் சிறுநீ ர் கழித்துவிடுவார்கள். பயம், சிறுநீ ரகத்தின் செ யல் குறைவினால் ஏற்படக்கூடியது. குடிப்பழக்கம் கல்லீரலைக் கெடுக்கின்றது. குடிபோதையில் இருக்கும் ஒருவனை எளிதில் கோபமுண்டாக்கிவிட முடியும். கோப மனப்பான்மை கல்லீரல் பாதிப்பினால் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒருவரின் மனநிலையை வைத்தே அவருடைய நோயின் இருப்பிடத்தை அறியமுடியும். அந்த உறுப்புக்குத் தேவையான ச க்தியை அறிந்து மீண்டும் பாதிப்புக்குள்ளான உறுப்பை பழைய நி லையில் இயங்க வைப்பதன் மூலம் மனக் கஷ்டங்களைக் குணப்படுத்த முடியும். எனவே, மனநோய்கள் மூளை ச ம்பந்தப்பட்டதல்ல. உடல் உறுப்புகளில் ச க்தி குறையும்போது மனநி லையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே ஒரு நோயின் ஆரம்ப நி லை. இந்த நி லையிலேயே பிற்காலத்தில் ஒரு உறுப்பில் ஏற்படக்கூடிய நோயை இன்றே தவிர்த்துவிட முடியும்.