சோதனைக்குழாய் கருத்தரிப்பில் அதிக வெற்றி வாய்ப்பு

  • Dr.Asha Rao
  • Jan 25, 2018
Appointment                Doctor Opinion          
 
சோதனைக்குழாய் கருத்தரிப்பில் அதிக வெற்றி வாய்ப்பு

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் பிரபலமான டாக்டர் ஆஷா ராவ் www.medicalonline.in-க்காக அளித்த கருத்துக்கள் இங்கே...

குழந்தையின்மைக்கான பிரச்சனைகள் நீண்டகாலமாக மருத்துவ அறிவியலுக்கு ஒரு சவாலாகவே இருந்துவந்தன. ஆனால் இன்றைய மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் ஏற்படும் மாற்றம், மேலும் புதிய தொழில்நுட்ப முறைகளால், குழந்தையற்ற தம்பதிகளுக்குள்ள குறைகளைக் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ராவ் மருத்துவமனையில் செயற்படும், கருத்தரிப்பில் உதவி மற்றும் எண் டோஸ்கோபி மையமான இஅகீஉ, உலகத்தரம் வாய்ந்த நவீன செயற்கைமுறை கருத்தரிப்புக் கூடத்தைக் கொண்டுள்ளது. கர்ப்பப் பையிலுள்ள ஃபைரொய்ட் கட்டிகளை நீக்குவது, அடினோமையோசிஸ் எனப்படும் படலத்தை நீக்குவது, முட்டைப் பையிலுள்ள நீர்க்கட்டிகளை நீக்குவது மற்றும் கருக்குழா யிலுள்ள அடைப்பினை நீக்குவது போன்ற அறுவை சிகிச்சைகள் எண்டோஸ்கோபி முறையில் செய்யப்பட்டு பெண்கள் கருவு றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகின்றன.

பெண்கள் நன்கு உடல்நலத்துடன் இருக்க வேண்டியது குடும்பத்திற்கு, இந்த சமுதாயத் திற்கு மற்றும் நாட்டிற்கு, ஏன், உலகத்திற்கே மிகவும் அவசியம். பெண்களின் வாழ்நாட் களில் பருவமடைதல் தொடங்கி, கர்ப்ப முற்று, குழந்தை பெற்று, பின்பு மாதவிடாய் நிற்கும் வயதினை அடைவது போன்றவை மிக முக்கியமான காலகட்டங் களாகும். இந்தச் சமயங்களில் கர்ப்பப்பை மற்றும் முட்டைப்பை போன்ற இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வருகிறது. இந்தத் தருணங்களில் பிரச்சனை ஏற்படும் பெண்களுக்கு எமது மருத்துவக் குழு தனிக்கவனம் செலுத்தி, தக்க அறிவுரை வழங்குகிறது.

பாறைகள் நிறைந்த மண்ணில் பயிர்கள் செழித்து வளர முடியாது அதைப் போல, ஆரோக்கியமற்ற கருப்பையில் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஃபைராய்ட் கட்டிகள் மற்றும் அடினோமையோசிஸ் போன்றவற்றினால் கரு உண்டாவதும் கருப்பையில் கர்ப்பம் தங்கி வளர்வதும் கடினம்.

ஃபைராய்ட் என்பது கர்ப்பப்பையின் சதையிலிருந்து வளரும் சிறு கட்டி களாகும். இது 16 முதல் 60 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்பட லாம். இதனால் புற்றுநோய் ஆபத்து கிடையாது. எனினும் அதன் அளவு மற்றும் இருக்கின்ற இடத்தினைப் பொறுத்து வலி மற்றும் அதிக உதிரப்போக்கினை ஏற்படுத்துவதுடன் குழந்தையின்மைக்கும் காரணமாகிறது.

அடினோமையோசிஸ் என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் வீக்கமாகும். இது கட்டிபோல இல்லாவிட்டாலும் அதிக வலியை ஏற்படுத்தும். இதனாலும் புற்று நோய் ஆபத்து கிடையாது. ஆனால் இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள் வலியின் காரணமாக கர்ப்பப்பையையே நீக்கிவிடவேண்டும் எனத் துடிப்பார் கள். இவர்களுக்கு அறுவை சிகிச்சை எதுவுமில்லாமலேயே சிகிச்சையளிக் கப்பட்டு ஆரோக்கியமான குழந்தையைப் பெறவும் வழிவகை செய்யப்படு கிறது.

ராவ் மருத்துவமனையின் CARE மையம், கடந்த இரண்டு ஆண்டுகளாக AVF -ICSI முறையில் தொடர்ந்து 60 சதவிகித வெற்றி வாய்ப்பினைப் பெற்றுள்ளது. சென்ற நவம்பர் 2006இல் நடைபெற்ற AVF-ICSI சிகிச்சையில் 40 பெண்களில் 24 பேர் கருவுற்றுள்ளனர் (60 சதவிகிதம்). ஹார்மோன் ஊசிகள் உபயோகிப் பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கருவினை வளர்க்க தரம் வாய்ந்த கல்ச்சர் மீடியாவினை உபயோகிப்பது போன்றவற்றினால் கருவுறும் வாய்ப்பு பிரகாசமாகிறது. மேலும் எமது செயற்கை முறை கருத்தரிப்புக் கூடத்தின் நச்சுத் தன்மையற்ற வர்ணப்பூச்சு, HEPA ஃபில்டர் மூலமாகக் காற்றினைத் தூய்மை யாக்கி, ஆய்வகத்தில் காற்றின் அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது போன்ற நுணுக்கமான விடயங்களும் அவதானத்துடன் செய்யப்படுவதால் பெண்கள் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. செயற்கை முறை கருத்தரிப்பில் உபயோகிக்கும் ஆய்வகம் மற்றும் கருவிகள் மட்டுமே வெற்றி வாய்ப்பிற்குக் காரணமாவதில்லை. திறமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வே குழந்தையற்ற பலருக்கு சிகிச்சை அளித்து, அவர்கள் வாழ்வில் ஒளி பெறச் செய்துள்ளது.

அடினோமையோசிஸ், எண்டோமெட்ரியாசிஸ் மற்றும் ஃபைராய்ட் கட்டி கள் திடீரென, ஒரே இரவில் ஏற்படும் பிரச்சனைகள் அல்ல. பெண்கள் பருவ மடையும்போதேகூட அதற்கான அடித்தளம் ஏற்பட்டு இருக்கும். எனவே, பரு வப் பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக வலி மற்றும் உதிரப் போக்கினை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. நன்கு பரிசோதித்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம். இது பின்னாளில் ஏற்படும் பல பிரச்சனைகள், தொடர்ந்து ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து விடுபடச் செய்து, குழந்தை யின்மை மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் தவிர்த்து நல்ல வாழ்வினை ஏற்படுத்தித் தரும்.

கர்ப்பப்பையில் ஏற்படும் ஃபைராய்ட் கட்டிகள் மற்றும் அடினோமை யோசிஸ், பெண்கள் பருவமடையும் வயதில் இருந்து மாதவிலக்கு நிற்கும் வயதுவரை தொந்தரவை ஏற்படுத்தக் கூடியவையாகும். எமது மருத்துவ மனையில் பெண்களுக்கு அளிக்கப்படும் பல்நோக்கு சிகிச்சை காரணமாக அதிகப்படியான அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்து, கருவுறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எமது CARE மையம் உலகத்தரத்துடன் கூடிய செயற்கை முறை கருத்தரிப்புக் கூடம் மற்றும் தேர்ந்த, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய மருத்துவக் குழுவுடன் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் 50 முதல் 60 சதவிகித வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளது.

தொடர்புக்கு: +91 422 2553971