இலங்கையில் இயங்கிவரும் கருமுட்டை, உயிரணு வங்கி

  • Dr.Nandita A.Thakkar
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
இலங்கையில் இயங்கிவரும் கருமுட்டை, உயிரணு வங்கி

குழந்தையின்மைக்கான காரணங்களை பற்றி அறிய மகப்பேற்றுத் துறையில்  நிபுணராக திகழ்ந்துவரும் டொக்டர் நந்திதா ஏ. தக்காரை www.medicalonline.in க்காகச் சந்தித்தோம்.

குழந்தையின்மைக்கான காரணங்களாக எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?

தற்போதைய வேகமான காலகட்டத்தில் ஆண், பெண் என இருவருமே காரணமாக இருக்கிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல் லப்போனால் ஆண்களின் மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளதாகவே ஆய்வுகள் தெரிவிக் கின்றன. மாறியிருக்கும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், திருமணமான புதிதில் குழந் தைப் பிறப்பைத் தள்ளிப்போடுதல், எல்லை மீறிய சட்டபூர்வ மற்றும் சட்ட விரோதமான கருக்கலைப்பு, பி.சி.டி எனப்படும் பாலி ஸிஸ்டிக் ஓவரிஸ் குறைபாடு, உயிரணுக்க ளின் எண்ணிக்கையில் உள்ள குறைபாடு, வீரியமற்ற உயிரணுக்கள், பாதுகாப்பாற்ற முறையில் செய்துகொள்ளும் கருச்சிதைவு ஆகியவை காரணங்களாகக் கண்டறியப்பட் டுள்ளன. இந்த ஆய்வு மேலும் தொடர்கி றது.

மகப்பேறின்மையைத் தீர்க்க எவ்வகையான உத்திகளைக் கையாண்டு வருகிறீர்கள்?

செயற்கைக் கருத்தரித்தலுக்குத் தேவை யான கருமுட்டை மற்றும் உயிரணு வங்கி யைத் தற்போது இங்கேயே தொடங்கியிருக் கிறோம். இதன்மூலம் இந்தியாவிற்குச் சென்று சிகிச்சை  பெறவேண்டும் என்ற சூழலைத் தவிர்த்திருக்கிறோம். உயிரணு மற்றும் கருமுட்டையைப் பாதுகாக்கும் முறையில் சர்வதேச தரத்தினைப் பின்பற்றி வருகிறோம். செயற்கை முறை கருத்தரித்தலை எளி தாக்கி, வெற்றியின் வீதத்தை உயர்த்தி வருகிறோம். குழந்தையின்மைக்கான பிரச்சினை குறித்த முழுப் பரிசோத னையை  இந்தியாவில் செய்துகொள் வதைப் போலவே இங்கேயே செய்து கொள்ளும் வசதியையும் உருவாக்கி யிருக்கிறோம்.

ஒரு பெண்ணிடமிருந்து ஆறு முறைதான் கருமுட்டையை தானமாகப் பெறவேண்டும். அதற்கு மேல் எடுத்தால் அது ஆபத்தை விளைவிக்கும் என்கிறார்களே.. இது உண்மையா?


ஆரோக்கியமான கருமுட்டையை ஒரு முறை பெற்றாலே போதுமானது. அதேநேரம், அடிக்கடி கருமுட் டையை தானமாகத் தரும் பெண்க ளுக்கு ஹார்மோன் சுரப்பிகளின் செயற்பாட் டில் மாற்றம் ஏற்பட்டு, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். எனவே அதிகமான முறையில் கரு முட்டையை தானமாகத் தரக்கூடாது.

மலட்டுத்தன்மைக்கும் உணவு முறைக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதா?

ஆணின் மலட்டுத்தன்மைக்கோ அல்லது பெண்ணின் மலட்டுத்தன்மைக்கோ அவர் கள் உண்ணும்  உணவு முறைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தற்போது டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களை, அதாவது `ஜங்க் புட்\' என்ற உணவுகளை உண்ணும் பெண்களுக்கு பாலி ஸிஸ்டிக் ஓவரிஸ் சிக்கல், அதாவது கருவகத் தில் ஏதேனும் சிக்கல்கள் உருவாகலாம். ஆனால் அது மிக அரிது. அதனை நவீன மருத்துவத்தால் சீரமைக்க முடியும். ஆனால் மது, சிகரெட் போன்றவற்றைப் பயன் படுத்தினால் அது மலட்டுத்தன்மையை உரு வாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

நீரிழிவுக்கும் மகப்பேறின்மைக்கும் தொடர்பு உள்ளதா?

உயிரணு மற்றும் கரு முட்டை உற்பத்தி யில் சமச்சீரற்ற தன்மையையும், தகுதியற்ற வையையும் நீரிழிவு உருவாக்குகிறது. ஆனால் நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத் துக்கொண்டு குழந்தையின்மைக்கான சிகிச் சை யைப் பெற முடியும். அதற்கான நவீன சிகிச்சை கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இக்சி மற்றும் ஐவிஎஃப் முறைகளில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன?


இவையிரண்டும் குழந்தையின்மைக்காக வழங்கப்படும் சிகிச்சை கள். இந்த இரண்டு தொழில்நுட்பமும் அதிகமான வெற்றிவீதத் தைக் கொண்டிருக்கின்றன. சாதாரண கர்ப் பத்தைப் போலவே இதன் பின்விளைவு இருப்பது சாதகமானது.

வாடகைத்தாய் மற்றும் செயற்கை கருத்தரிப்பில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி எப்படியிருக்கும்?

மற்றைய குழந்தைகளின் வளர்ச்சியைப் போலத்தான் இவர்களின் வளர்ச்சியும் இருக் கும். இவர்கள் அசாதாரணமானவர்களாக இருப்பார்கள் என்பது மூடநம்பிக்கையே.

ஸ்பேர்ம் கல்ச்சர் பரிசோதனையின் அவசியம் என்ன?

ஸ்பேர்ம் அனாலிஸஸ்ஸிற்காகத்தான். அதாவது, உயிரணுக்களின் வீரியம் மற்றும் அதன் செயற்பாடு குறித்து இனம் கண்டறிவ தற்காகச் செய்யப்படும் பரிசோதனை. இப் பரிசோதனையின் முடிவில் தான், எம்மாதிரி யினை சிகிச்சை யை மேற்கொள்ள வேண் டும் என்பதை மகப்பேறு நிபுணர்கள் தீர்மா னிக்கிறார்கள்.

செயற்கை முறை கருத்தரித்தலில் குழந்தையை சத்திர சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டுமாமே, உண்மையா?


இல்லை. என்னுடைய மருத்துவ அனுப வத்தில் மூன்று பெண்களுக்கான செயற்கை முறை கருத்தரிப்பில் இயற்கையான முறையிலேயே தான் பிரசவம் நடைபெற்றது. அவர்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அதே தருணத்தில் பெண்களின் வயது மற்றும் மனோதிடத்தைப் பொறுத்து, செயற்கை முறைக் கருத்தரிப்பில் சத்திரசிகிச்சை யும் பரிந்துரைக்கப் பட்டு, மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தையின்மைக்கான சிகிச்சை யைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க நோயாளிகளின் விருப்பத் தெரிவாகும். அத னால் அவர்களுக்கு எம்மாதிரியான சோத னையும், எம்மாதிரியான சிகிச்சை யும் வழங் கப்படுகிறது என்பதையும், அதன் ஒவ் வொரு நிலையையும் அவர்கள் அறிந்திருக் கவேண்டும். ஏனெனில் குழந்தையைப் பெற்றுக்கொள்ளாமல்கூட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும் எண்ணமுடையவர் களாக இருக்ககூடும்.

தொடர்புக்கு: 0091 98400 90999