வெண்புள்ளி நோய்க்கான சிறந்த மருத்துவம்!

  • Dr.Gnanasambandam
  • Jan 06, 2018
Appointment                Doctor Opinion          
 
வெண்புள்ளி நோய்க்கான சிறந்த மருத்துவம்!

உலகத்தில் தற்போது வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு நிவாரணம் தரக் கூடிய மருந்துகள் குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் பன்றிக் காய்ச்சல் மட்டுமன்றி ஏனைய நோய்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் ஒரு மருத்துவ முறை இருக்கிறது என்று தெரிந்தால் நிச்சயமாக அதனைப் பற்றி அறிந்துகொள்ள ஆவல்கொள்வோம்.

இந்த மருத்துவ முறையின் சிறப்பே நீடித்த நோய்களுக்கான தீர்வை தருவது தான் என்று அதனைப் பற்றி கூடுதலாக அறிந்து கொண்டவுடன், அது என்ன மருத்துவம்? என்று மனதுள் எழுகிறதா? ஆம். அதுதான் ஹோமியோபதி மருத்துவம்.

இந்நிலையில் இந்த மருத்துவம் குறித் தும், இதனால் குணமாக்கப்படும் நோய்கள் குறித்தும் நமக்கு எழும் ஐயங்களை, சென்னையில் இயங்கி வரும் ஏ.கே.பி ஹோமி யோபதி மருத்துவமனையின் இயக்குநரும், ஹோமியோபதி மருத்துவ நிபுணருமான டொக்டர் ஆர். ஞானசம்பந்தத்தைச் சந்தித்து கேட்டோம்.

உடலில் திடீரென்று எங்கேனும் தோன்றும் வெண்புள்ளி விரைவாக உடல் முழுவதும் பரவி விடுகிறது. இதற்கு என்ன காரணம்? இதை ஒரு சிலர் வெண் குஷ்டம் என்கிறார்களே. அது உண்மையா?

வெண்புள்ளி என்பது வேறு. வெண் குஷ்டம் என்பது வேறு. நமது தோல்பகுதியில் மெலனின் எனப்படும் நிறமிகள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்\' எனப்படும் செல் அணுக்கள்தான் மெலனின் நிறமி சத்தை உருவாக்கும். நிறமிகளின் சத்து அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும் தோன்றுவோம். ஆனால் சிலருக்கு குறிப்பிட்ட இடங்களில் உள்ள செல் அணுக்கள் ஏதோவொரு காரணத்தால் பாதிப்படைவதால், அவ்விடத்தில் இருக்கும் நிறமிகளின் சத்து குறைந்து வெண்புள்ளிகளை ஏற்படுத்துகிறது.

இந்தக் குறைபாடு உட லின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றும். 

வெண்புள்ளிகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று `விட்லிகோ\' எனப்படும். மற்றொன்று `லூக்கோ டெர்மா\'.

இதில் விட்லிகோ எனப்படுவது உடல் முழுவதும் வேகமாக பரவக்கூடியது. பெரும்பாலும் உதடு, கைகள், கால்கள், தொப்புள், பிறப்புறுப்புகள், மார்பு காம்பு, காது போன்ற இடங்களில் தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கும். இதில் ஒரு சிலருக்கு உடல் முழுவதும் வேகமாக பரவி, வெள்ளைகாரர் போல் மாறிவிடுவதும் உண்டு.

`லூக்கோ டெர்மோ\' எனப்படுவது உடலின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் பாதிக்கும் வகையைச் சேர்ந்தது. உடலில் எங்கேனும் தீயால் சுட்ட புண்கள் இருந்தாலோ அல்லது இரப்பர் செருப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தாலோ இவ்வகையான வெண்புள்ளி வரும்.

இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, எதிர்வினையை ஏற்படுத்துவதால், நிறமி அணுக்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. இது ஒரு சிலருக்கு பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம். தைராய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள், நீரிழிவு வியாதி, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச் சத்துக் குறைவு, செல்களுக்குக் கிடைக்க வேண்டிய விட்டமின் குறைபாடு ஆகியவைகளால் இவை உருவாகும்.

மேலும் ஒரு சிலருக்கு அமீபியாஸ், குடல் நோய்கள், குடற்பூச்சிகள், இரத்தச்சோகை, டைபாய்ட் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின் தாக்குதலாலும் இவை ஏற்படும். அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும் நிறமி அணுக்கள் தம்முடைய பணியைச் சரிவர செய்யாது. இந்தக் குறைபாடு எப்போது வேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றும்.

உடலியக்கத்தைச் சீராக செயற்பட வைப்பதுதான் இதற்கான சரியான சிகிச்சை. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் வந்ததா? பரம்பரையின் காரணமாக ஏற்பட்டதா? வேறு சில நோய்களின் பின்விளைவினால் உருவானதா? என்பதை ஆய்ந்தறிந்து, உடல் திறனுக்கு ஏற்ப சிகிச்சை யளிக்கவேண்டும். உடலின் இயக்கம் சீரடைந்தால், சருமத்தில் உள்ள மெலனோசைட் செல்கள் பணியாற்றத் தொடங்கும். தோலின் மீது சூரிய ஒளிபட்டால்கூட நிறமிகள் வேலை செய்யும். அதனால் சில மருத்துவ முறைகளில் சில வெளிப்பூச்சுகளை பூசிக்கொண்டு, சூரியனின் ஒளி உடலில் படுமாறு நில்லுங்கள் என்று பரிந்துரைப்பார்கள். ஆனால் எங்கள் மருத்துவத்தில் வெளிப்பூச்சு கிடையாது. அதனால் சூரிய ஒளியில் நிற்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் எங்கள் மருந்துகளுக்கு பக்க விளைவுகளும் கிடையாது.

பொதுவாக உதடுகளில் தோன்றும் வெண்புள்ளிகள் விரைவில் குணமடையும். உடல் முழுவதுமாகத் தோன்றும் வெண் புள்ளிகளுக்கும், ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் வெண்புள்ளிகளுக்கும் சிகிச்சை பெற்றால்தான் குணமாகும். அத்து டன் பொறுமையுடனும் சிகிச்சையை எடுத்துக்கொள்ளவேண்டும்.

உடலில் எங்கேனும் வெண்புள்ளிகள் தோன்றினால் விட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும் எலுமிச்சை, திராட்சை , ஒரேஞ்ச், ஊறுகாய், மீன், முட்டை, மாமிசம் ஆகியவற்றைத் தவிர்த்துவிடவேண்டும். அத்துடன் பொதுவாக புளிப்புச் சுவையையே தவிர்த்து விடவேண்டும். அதற்கு மாறாக காரட், பீட்ரூட், முள்ளங்கி, பனை வெல்லம், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெண் குஷ்டம் என்பது தொழுநோயின் அறிகுறி. இதற்கும், வெண்புள்ளிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழு நோய் ஒருவித வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உருவாகிறது. அதற்கான சிகிச்சை முறை முற்றிலும் வேறானது.

வெண் புள்ளிக்கு மற்றைய மருத்துவ முறைகளை விட ஹோமியோபதி மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்தால் நல்ல பலன், நிரந்தரமாக உண்டு.

எந்த வகையான குறைபாட்டைக் களைய இந்த மருத்துவ முறை சிறப்பானது?

நீடித்த நோய்களுக்கும், மற்ற மருத்துவ முறைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்கும் இதில் தீர்வு உண்டு. குறிப்பாக சேரியாஸிஸ், பாலிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட் கட்டிகள் ஆகியவற்றை குறிப்பிடலாம். புற்றுநோய்க்கு கூட இம்முறையில் சிகிச்சையுண்டு.

குழந்தைப் பேறின்மைக்கான சிகிச்சையில் இதன் பங்கு என்ன?

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் எளிமையான மற்றும் செலவு குறைவான மருத்துவ சிகிச்சை முறை இதுவாகத்தானிருக்கும்.

ஆண்மைக் குறைவில் பிரதான பங்கு வகிக்கும் விந்தணு குறைபாட்டிற்கு உறுதியான தீர்வு உண்டு. குறிப்பாக வெர்கோசில் பிரச்சினை. பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் கோளாறுகளை குணமாக்குகிறது.

ஹோமியோபதி மருத்துவ முறையில் வழங்கப்படும் மருந்துகளிலும், மாத்திரைகளிலும் ஸ்டீராய்ட் என்ற ஊக்க மருந்து கலந்திருக்கிறது. அதனால் பின்விளைவுகள் உண்டு என்று குற்றம் சட்டுகிறார்கள். இது உண்மையா?

நம்முடைய உடலில் ஸ்டீராய்ட் குறிப்பிட்ட அளவிற்கு இயல்பாகவே இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கடுத்து எல்லாவகையான ஆங்கில மருந்துகளிலும் இவை மிக நுண்ணிய அளவிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் ஒரு சில தாவரங்களில் கூட இயற்கையாகவே ஸ்டீராய்டுகள் இருக்கின்றன. இந்த மருத்துவத்தில் உள்ள மருந்துகளிலும், மாத்திரைகளிலும் ஸ்டீராய்ட் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. இது ஒரு தவறான பிரச்சரம்.நோயின் தன்மையைப் பொறுத்தும், நோயாளியின் உடலைப் பொறுத்தும், மிக நுண்ணிய அளவில் வீரியமில்லாத ஸ்டீராய்ட்கள் தரப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதனை மட்டுமே வழங்குகிறோம்.

அலோபதி அல்லாத ஏனைய மாற்று மருத்துவ முறைகளில் வழங்கப்படும் சிகிச்சை பலனளிக்கவேண்டும் எனில் பத்தியம் என்ற ஒரு விடயத்தை வலியுறுத்துகிறீர்கள். இது ஏன்? இதற்கும், மருந்து செயற்படும் தன்மைக்கும் தொடர்பிருக்கிறதா?

பத்தியம் என்பது நோய்க்குத்தான். ஹோமியோபதி பத்தியத்தை வலியுறுத்துவதில்லை. ஆங்கில மருத்துவத்திலிருந்து பிறந்ததுதான் இந்த மருத்துவம். ஆனாலும் சிகிச்சையளிக்கும் முறைகளில் ஆங்கில மருத்துவத்திலிருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனியாக ஒரு முறையை பின்பற்றுகிறது. இதில் வழங்கப்படும் மாத்திரைகளை வாயில் போட்டுக்கொண்டு சப்பி சாப்பிடச் செல்லுகிறோம். இதன் மூலம் நாவில் உள்ள சுவையுணர் நரம்புகள் தூண்டப்பட்டு, உணவுக்குழாய்க்குள் மருந்துகள் சென்று, உடலியக்கத்தைச் சீராக இயங்கச் செய்து, நோய்களை குணப்படுத்துகிறது. ஒரு சில தருணங்களில் இந்த வகை மருந்து, மாத்திரைகளைச் சப்பிடும் முன் கோப்பி, தேநீர் ஆகியவற்றை சப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துவோம்.

இதன் காரணம் என்னவென்றால், சாப்பிடக்கூடிய மருந்து, மாத்திரையின் செயற்பாடுகளில் தடை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த மருத்துவம் பிரபலமாகாததற்கு என்ன காரணம்?

மக்களில் பெரும்பாலானோர் தங்களின் உடலுக்கு ஏதாவது ஒன்று என்றால், அதற்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கவேண்டும் என்று எண்ணுவது, கிராமப்புறப் பகுதிகளை இந்த மருத்துவ முறை சென்றடையாமை, இந்திய மருத்துவ முறைகளில் ஒரு பகுதி தான் இந்த மருத்துவம் என்கின்ற அங்கீகாரம் கிடைக்காமை எனச் சில காரணங்களை கூறலாம்.