சைனஸை குணப்படுத்தும் ஹோமியோபதி!

  • Dr.Parkavi
  • Apr 10, 2018
Appointment                Doctor Opinion          
 
சைனஸை குணப்படுத்தும் ஹோமியோபதி!

இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையில் சைனஸ் பிரச்சனை பரவலாக அனைத்து பகுதியினரையும் பாதித்து வரும் தொற்றாக இருந்துவருகிறது.

ஹோமியோபதி சிகிச்சை மூலமாக சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு காண மெடிக்கல் ஆன்லைன் சார்பாக ஹோமியோபதி நிபுணர் டாக்டர். பார்கவி அவர்கள் கூறியிருப்பதாவது. தலையின் மண்டை எலும்பில் மூக்குப் பகுதியில் உள்ள குழிக்கு "சைனஸ்" என்று பெயர். இந்தப் பாகங்களில் உள்ள குழிகளில் இரத்தம் அல்லது காற்று அடைப்பு என இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுவதைத்தான் நாம் சைனஸ் பிரச்சனை என்கிறோம். 

குழிகள் அமைந்துள்ள எலும்புப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த வியாதியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கண்களுக்கு மேல் சுற்றி அமைந்துள்ள எலும்புப் பகுதி (ஆர்பிட்), மூக்கின் இரண்டு பக்கமுள்ள மேல் தாடை எலும்புப் பகுதி (மாக்ஸிலரி), மூக்கின் அடிப்பாகத்தில் சல்லடை போன்ற எலும்புப் பகுதி (எத்மாய்ட்) ஆகிய தலையின் முன் பக்கமுள்ள எலும்புக் குழிகளில் பாதிப்பு ஏற்படுவது "ஃப்ரண்டல் சைனஸ்" எனப்படும். முகத்தின் ஒவ்வொரு தாடையில் உள்ள எலும்புக் குழியின் உயரம் 3 செ.மீ. அகலம் 2.5 செ.மீ. ஆழம், 2 செ.மீ. உள்ளது. இதில் பெண்களைவிட, ஆண்களுக்கு சற்று அளவு அதிகமிருக்கும்.

மூக்கின் பின்புறமுள்ள (தலையின் பின்பகுதி) "ஸ்ஃபினாய்ட்" என்ற எலும்புக் குழியில் பாதிப்பு உண்டாவதை "ஸ்ஃபினாய்டல் சைனஸ்" எனப்படும்.

இந்த இரண்டு விதமான பாதிப்புகளும், மூக்கின் மூலமாகச் சென்று தொற்றுகின்றன. ஒவ்வாமை, புகை, தூசு நிறைந்த சுற்றுச்சூழல், அசுத்தமான தண்ணீரில் நீச்சல் அடிப்பது, மர வேலை செய்தல், சின்னம்மை, மூக்கினுள் சதை வளர்ச்சி ஆகிய காரணங்களால் வர வாய்ப்புள்ளது. கண்வலி, தலைவலி, முகவலி, காய்ச்சல், சளி, வாசனை உணர்வு இல்லாமை, மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் இருக்கும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் ஃப்ரண்டல் சைனஸ்-க்கு யூகலிப்டஸ் ஜி, காலி பைக்ரோமிகம், டூக்ரியம் என்ற மருந்தும், ஸ்ஃபினாய்டல் சைனஸ்-க்கு ஆர்னிகா, ஹிபார் சல்ப், ஸ்டிக்டா என்ற மருந்தும் நல்ல பலன் தரும் ஹோமியோபதி மருந்தாக செயல்படுகிறது. இதுபோன்று அனைத்து நோய் பிரச்சனைகளுக்கும் ஹோமியோபதி மருத்துவ முறையின் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மெடிக்கல் ஆன்லைன் சார்பாக டாக்டர் பார்கவி கூறினார்.