கர்ப்பப்பை புற்றுநோய் வராமலிருக்க இளவயது திருமணம் கூடாது

  • Jan 03, 2018
 
கர்ப்பப்பை புற்றுநோய் வராமலிருக்க இளவயது திருமணம் கூடாது

சென்னையில் இயங்கிவரும் குருபாலா மருத்துவமனையின் பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.

முப்பது வயதை கடந்து விட்டவர்களுக்கு எப்போதாவது ஒரு கட்டத்தில் அதிகமான உதிரப்போக்கு, துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் தங்களுக்கு ஏதோ வந்து விட்ட தாக நினைத்து பயந்து போய் விடுகிறார்கள். அதிலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத பெரும்பாலான பெண்கள் இத்தகைய ரத்தப்போக்கை கருக்கலைவாக நினைத்து விடுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வந்திருப்பது கர்ப்பப்பை புற்று ய் என்று தெரிந்தவுடன் பதறியடித்து ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை பெறுகிறார்கள். இது தவறில்லை நாங்களே எங்களிடம் வரும் இனம் கண்டறியப்பட்ட புற்று நோயாளிகளை முதலில் ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்து கொள்ளவது தான் சிறந்தது என்று பரிந்துரை செய்கிறோம். ஆனால் அவர்களால் கைவிடப்பட்ட புற்று நோயாளிகளை நாங்கள் குணப்படுத்துகிறோம்.

பொதுவாக ஆண்களை விட, பெண்களின் கருவுறுப்புகள் அனைத்தும் மிகவும் சிக்கலான அமைப்பை உடையவை. அதனால் வரக்கூடிய பிரச்சினைகளும் அதிகம், பாதிப்புகளும் அதிகம். அதிலும் `செர்விக்கல் கான்சர்\' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கர்ப்ப வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு இளம்வயதில் திருமணம் செய்துகொள்வது, அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்வது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளாதது, புகைப்பழக்கம் உடையவர்களின் அருகில் அதிக நேரத்தைச் செலவிடுவது, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது, முட்டைகள் வெளிவராமல் அடைப்பட்டுப்போவது மற்றும் மனித பாப்பிலோமா என்ற வைரஸ் தாக்குதல் ஆகியவை காரணமாகின்றன.

பதினெட்டு வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டாலும், சுகாதாரமற்ற உடலுறவு, ஒரிரு முறை தானே என்று வேற்று ஆளுடன் உறவுவைத்துக் கொள்வது, தரமற்ற கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது, அதிகமான சுய இன்பம் செய்வது போன்றவற்றால்கூட புற்றுநோய் வந்து விடும். இவை தவிர ஹார்மோன் சுரப்பிகளின் மாறுபாடுகளாலும், கர்ப்பப்பை வாய்ப்புற திரவ உற்பத்தி போதுமான அளவு இல்லாமல் போனாலும் கூட புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

கர்ப்பப்பையில் கருவணு விடுபடாமை, ஹார்மோன் பிரச்சினை, சினைப்பை காயம், முன்னதாகவே மாத விலக்கு முற்றுப்பெறுவது, கருவணு தொடர்பான பிரச்சினைகள், உளவியல் காரணம், நோய் தொற்றுகளால் அழற்சி, வயிற்றுப்பகுதி நோய்கள், கருக் கலைப்பு, கருச்சிதைவுகளால் வரும் அழற்சி, எண்டோமெட்ரியோசிஸ் கருப்பை ஒட்டிக்கொள்ளுதல், கருப்பையில் அந்நியப் பொருட்கள் ஆகிய 12 காரணங்களால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு காரணமாகின்றன.

எல்லாவற்றிற்கும் வயிற்றுவலி தான் முதலில் தோன்றும் அறிகுறி. அதைத் தொடர்ந்து வயிற்றோட்டம் வரலாம். வயிறு உப்புசமாக இருக்கும். கருமுட்டை வெளியிடப்படாததால் மாதவிலக்கு கோளாறுகள் தோன்றி உதிரப்போக்கு அதிகமாகும். வெள்ளைப்படுவதோடு பித்த வாந்தியும் வரும். பலவீனமாக தங்களை உணர்வார்கள். முதுகுவலியும், ரத்த சோகையும் ஏற்படும். இம்மாதிரியாக அறிகுறிகள் தோன்றிய பிறகாவது கர்ப்பப்பை ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை பாப்ஸ்மியர் எனப்படும் திசுச்சுரண்டல் பரிசோதனையை செய்து கொள்ளுங்கள்.

முறையான உணவு பழக்கம், உடல் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், உடல் எடையை சீராக பராமரிப்பது, தேவை யான அளவிற்கு உடற்பயிற்சி ஆகியவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். மாதவிலக்கு சரியாக நிகழுமாறு பார்த்துக் கொண்டாலே இவை அணுகாது. டாக்டர் ஷ்ரீதர் நம் மண்ணிலிருந்து சென்ற பல புற்றுநோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தி யவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மட்டுமல்லாமல் எந்த நிலையில் இருக்கும் புற்றுநோயையும் குணப்படுத்தியவர் என்பது பிறகு தெரியவந்தது.