போதைப் பழக்கத்திலிருந்து விடுபட சித்த வைத்தியம் உதவுகிறது

  • Dr.Sri Rajaguru
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
போதைப் பழக்கத்திலிருந்து விடுபட சித்த வைத்தியம் உதவுகிறது

பட்டினியாகக்கூட இருந்துவிடலாம். ஆனால் குடிகாரனைக் கணவனாகவோ, தந்தையாகவோ பெற்றுவிட்டால் அவனது மனைவி மற்றும் வாரிசுகள் அடையும் அவமானத்தை வார்த்தைகளால் விளக்கிட இயலாது. குடிப்பவர்கள் முதலில் தங்களின் குடும்ப கௌவரத்தை இழக்கிறார்கள். குடிப்பதால் குடும்பப் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளிவிடுகிறார்கள்.

அத்துடன் தங்களின் ஆரோக்கியத்திற்கும் வேட்டு வைத்துக் கொள்கிறார்கள். இவர்களை மீட்பதெப்படி? என்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் களை மீட்க சித்த மருத்துவத்தைக் கைக் கொண்டால், பின்விளைவாகப் பக்கவாதம் வந்துவிடும் என்பதால், வேறு சிகிச்சை களை எடுத்துக்கொண்டு, அவை பலன் தராது என்று கூறி, கைவிடப்பட்ட நிலையில் மீண் டும் சித்த மருத்துவத்தை நாடுகிறார்களே? என்ற சந்தேகத்தையும்,  எந்தவொரு மருந் தும் ஒரு போதும் நோயாளிக்கு தண்டனை வழங்கியதில்லை. மாறாக நிவாரணத்தை யும், தீர்வையும் தருவது தான் அதன் பணி. அப்படியிருக்கையில் ஏன் சித்த மருத்து வத்தை எடுத்துக்கொள்ளகூடாது? என்ற வேறொரு வாசகரின் ஆதங்கத்தையும் எடுத் துக்கொண்டு, தமிழகத்தின் கோவில் மாந கராம் மதுரையில் செ யற்பட்டு வரும் ஷ்ரீ ராஜகுரு சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், சித்த மருத்துவருமான டொக்டர் எஸ்.ராஜகுருவை சந்தித்தோம்.

குடி மற்றும் போதைக்கு அடிமையான வர்களை மீட்க எம்மாதிரியான சிகிச்சை  யினை மேற்கொள்கிறீர்கள்?


குடி மற்றும் போதைக்கு அடிமையான வர்களை மீட்பதில் அதிக கவனம் செ லுத்து கிறோம். அவர்களை அந்தத் தீய பழக்கங்க ளிலிருந்து மீட்பது, அதனால் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவது, குடல் பகுதிகளில் ஏற்பட்ட புண்களுக்கு சிறப்பு சிகிச்சை யளித்து குணப்படுத்துவது, குடிப்பழக்கத்தால் அவர்கள் இழந்திருந்த தாம்பத்யத்திற்கான தகுதியை மீட்டெடுப்பது என இந்தப் பழக்கத்திலிருந்து நோயாளியை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில் சிகிச் சை யினை மேற்கொள்கிறோம்.

இந்தத் தீய பழக்கத்திலிருந்து மீட்டெ டுக்க எதற்காக இந்த மருத்துவ சிகிச் சை யை நாடவேண்டும்? இதன் சிறப்பு என்ன?

மற்றைய மருத்துவ சிகிச்சை களில் தற் காலிக நிவாரணத்தையோ அல்லது குடிப் பழக்கத்திலிருந்து மீட்கிறோம் என்று கூறி, நோயாளியை பலவீனமானவராகவோ மாற்றிவிடுகிறார்கள். இந்தப் பழக்கத்திலி ருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள் பலவீன மாக  இருப்பதால் அவர்களால் இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள முடிவதில்லை. இதனால் மீண்டும் மன உளைச்சலுக்கோ, மன அழுத்தத்திற்கோ உள்ளாகி, அந்தத் தீய பழக்கத்தைத் தொடர ஆரம்பித்துவிடுகின் றனர். ஆனால் சித்த மருத்துவம், அவர்களை தீய பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதுடன், அவர்கள் மீண்டும் வாழ்க்கையை சந்திப்ப தற்குரிய தகுதிகளோடும், அதற்குரிய மன நிலையோடும் சீர்ப்படுத்துகின்றது. இதனால் குடிப்பழக்கத்திலிருந்து மீள ஏனைய சிகிச்சை  முறைகளை விட சித்த மருத்துவமே சிறந்தது.

இரத்தத்தை சுத்திகரிப்பது, மதுவினால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் செ யற்பாட்டை இயல்பு நிலைக்குத் திருப்புவது, இவர்க ளுக்கு குடற்பகுதியில் ஏற்பட்ட புண்ணை சீராக்கி, நரம்பை வலுவாக்கி, இரத்த உற் பத்தியை அதிகரிக்கச் செ ய்துவிட்டால்... அவன் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

கணனி முன் நீ ண்ட நேரம் பணியாற் றுபவர்கள் மற்றும் இரவு, பகல் என மாறி மாறிப் பணியாற்றுபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் தாம்பத்தியத்தில் முழு ஈடுபாடின்மை. இதற்கு என்ன காரணம்? இவர் களுக்கு சித்த மருத்துவம் எம்மாதிரி யான ஆலோசனை வழங்குகிறது?

எந்தவொரு செ யலையும் தொடர்ந்து மேற்கொள்ளும்போது ஏற்படும் சலிப்பு உணர்வே இதற்குக் காரணம். மனிதனின் படைப்பில் மிக மென்மையான உறுப்பு எது என்று பார்ப்போமேயானால் கண்களும், பிறப்புறுப்பும்த ;ான். இதனை மனிதன் எப்ப டிப் பயன்படுத்திக்கொள்கிறான் என்பதைப் பொறுத்துத்தான் அவனின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். எந்தவொரு உணர் வும் இயல்பிற்கு மேல் பீறிட்டால், அது ஆண்மையைப் பாதிக்கும். நமக்கு ஏற்படும் காய்ச்சல், இயல்பைவிட அதிக நாட்கள் நீ டித் தால் அதனாலும் ஆண்மை பாதிக்கப்படும். அதே தருணத்தில் உடல் சூட்டைத் தணிக் கும் என்றும், ஆரோக்கிய பானம் என்றும், சீறுநீ ரகம் தொடர்பான சிக்கல்களுக்கு சிறந்த தீர்வு என்றும் கருதப்படும் இளநீ ரைத் தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்க ளுக்கு மேல் அருந்தி னால் கூட மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புண்டு என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டி ருக்கிறது. எந்த வொரு சிகிச்சை யி லும் வழங்கப்படும் மருந்துகளால் நோயாளிக்குப் பின் விளைவு உண்டு. சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் மருந்துக ளுக்கும் பின் விளைவு உண்டு. உதாரணமாக இஞ் சியைச் சாப்பிட் டால், செ ரிமா னம் நன்றாக நடைபெற்று, மலச்சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால் இஞ்சி யின் தோல் இதற்கு நேர் எதிரானது. வயிற் றுக்குள் செ ன்று செ ரிமானத்தின் செ யற்பாட் டைக் குறைத்துவிடும் தன்மைக் கொண்டது. எனவே ஹோட்டல்களில் சாப்பிடும்போது இஞ்சியை தோலுரிக்காமல் தான் பயன்படுத் துவார்கள். அதனால் ஹோட்டலில் சாப்பி டும்போது இஞ்சியைப் பார்த்துவிட்டு சாப் பிடவேண்டும். வீட்டில் சமைக்கும்போது இஞ்சியின் தோலை நீ க்கிவிட்டுத்தான் பயன் படுத்த வேண்டும். அதேபோல மணமுள்ள பொருட்களை (ஏலக்காய்) அதிகமாகப் பயன்படுத்தினாலும் இந்தக் குறைபாடு உரு வாகலாம்.

அளவாக மது அருந்துவது ஆரோக்கி யமே என்றும், பியர், வைன் போன்ற அல் கஹோல் குறைவான மதுவை அருந்துவ தால் எந்த பாதிப்பும் இல்லையென்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது சரியா? தவறா?


ஒருவருடைய மதுப் பழக்கத்திற்கு நுழை வாயிலாக இருப்பது இந்த பியரும், வைனும் தான். இந்தப் பழக்கம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. கவர்ச்சியா கத் தொடங்கி, நம்மை அடிமைப்படுத்தி, கோழையாக்கி, தற்கொலைக்குத் தூண்டும் சக்தியைத் தருவது இந்த மதுபானங்கள்தான் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக ஒருவருக்கு இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், அந்த இடத் தில் வலியை உணர்கிறார். மது அருந்துபவர் களுக்கு இரத்தமே குறைவாகிவிடும், அதே போல் இயல்பாக நாம் இரண்டு கி.மீ ஓடி னால் தளர்ந்துபோய், சோர்ந்து விடுகிறோம். ஆனால் மதுவிற்கு அடிமையானவர்கள் சிறிது அருந்தினாலே நரம்பு தளர்ந்துவிடும். குடித்துவிட்டுத் தள்ளாடுகிறார் என்றால் அவ ருடைய நரம்புகள் தளர்ந்துபோய் விட்டன என்றே பொருள்.

உணவு அருந்தாததால் ஒருவித வலி, உடலில் இரத்தம் இல்லாததால் ஒருவித வலி, நரம்பு தளர்வானதால் ஒருவித வலி. ஆனால் இதனை வலி என்று குடிகா ரர்கள் உணர்வதில்லை. இதிலி ருந்து விடுவித்துக்கொள்ள மதுவை நாடுகிறார்கள். மது, அவர்களுக்கு இத்தகைய குறை களை மரத்து போகச் செ ய்கி றது. எனவே  மதுப்பழக்கத்தை எந்தக் காரணம் கொண்டும் ஏற்ப டுத்திக்கொள்ளா தீர்கள்.

இப்பழக்கத்திலி ருந்து மீட்டெடுக்க கவுன்சிலிங் என்ற தொரு சிகிச்சை யைக் கையாளுகிறார்களே. இதனால் என்ன பயன்?


கவுன்சிலிங் என்பதும் இப்பழக்கத்திலி ருந்து மீட்டெடுக்கக்கூடிய சிகிச்சை யின் ஒரு பகுதியே. இதற்கும் குறிப்பிடத்தக்க பலன் இருக்கிறது. மதுவிற்கு அடிமையானவர்க ளிடம் ஏன் இதற்கு அடிமையானீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு காரணத் தைக் குறிப்பிடுவார்கள். அதே தருணத்தில் அவர்களுடைய சிந்தையிலும் சில நெருடல் களும், தடங்கல்களும் இருக்கும். இதனை அகற்றவும் - முற்றிலும் களையவும் கவுன் சிலிங் நல்ல பலனைத் தருகிறது. முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். குடிகாரர் கள் நல்ல புத்திசாலிகள். அதாவது மது அருந்தினால் உடலில் பித்தம் அதிக மாகி, உடல் சூடடையத் தொடங்கும். உடல் சூட்டால் இரத்த ஓட்டம் அதிக ரிக்கும். இரத்த ஓட்டம் அதிகரிப்ப தால் மூளை உற்சாகமாக இயங்கும். அத்தகைய தருணத்தில் நாம் எது சொன்னாலும் அதனை ஆழ்ந்து கவனித்து உட்கிரகித்துக்கொள்வார் கள் குடிகாரர்கள். ஆனால் ஒரு எல் லைக்கு மேல் கவனிப்பதில் ஆர் வம் காட்டமாட்டார்கள். அதனால் ஒரு சிலருக்கு கவுன்சிலிங் எதிர் பார்த்த பலனைத் தருவதில்லை. மாறாக குடிகாரர்களுக்குத் தெரியும் தாங்கள் செ ய்வது தவறுதான் என்று. ஆனாலும் அதி லிருந்து தங்களை விடுவித்துக்கொள்வ தில்லை. ஒரு சிலருக்கு ஆங்கில மருத்துவத் தில் மாத்திரைகள் தருவார்கள். இது இரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும். இது ஒரு மிரட்டல் நடவடிக்கையால் ஓரளவிற்கு நோயாளிக்குப் பயம் ஏற்பட்டு, இதிலிருந்து விலகத் தொடங்குவான். ஆனால் சித்த மருத் துவம் இவர்களைப் போன்றோர்களையும் குணப் படுத்தும் தன்மையது.

சித்த மருத்துவமும் இந்திய மருத்துவ சிகிச்சை  முறைகளில் ஒன்றுதான் என அங்கீகரித்திருக்கிறார்களே தவிர, உலகள வில் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?

இதற்கு சித்த மருத்துவர்கள் தங்களுக் குள் விதித்துக்கொண்டிருக்கும் சில கட்டுப் பாடுகள்தான் காரணம். ஆனால் தற்போது இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மற்றும் தெற்காசியாவிற்கான மருத்துவக் கூட்ட மைப்பு, சித்த மருத்துவத்தைப் பற்றி சில எளிமையான மற்றும் வெளிப்படையான வழிவகைகளைக் கண்டறிந்து, ஆய்வுக்குட்ப டுத்தியிருக்கிறது. இதன் முடிவுகளைப் பொறுத்து, எதிர்காலத்தில் இதன் எல்லை விரிவடையும் என்று எண்ணுகிறோம்.

பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்க ளுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை  எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று ஒரு சில சித்த மருத்துவர்களே பரிந்துரைக்கி றார்களே அது ஏன்?


ஜீரணம் தொடர்பான விடயத்தில், பன்னி ரண்டு வயதுக்குட்பட்டவர்களின் செ யற் பாடு சமச்சீராக இல்லாததால் சித்த மருத்து வம் அவர்களுக்குப் பெரிதாகப் பலனளிப்ப தில்லை. சித்த மருத்துவம் கழுத்துக்கு மேலே யும், இடுப்பிற்குக் கீழேயும் உள்ள உறுப்புக ளின் குறைபாட்டிற்கு முழுமையாக உதவுவ தில்லை. அதற்காக மருந்துகளே இல்லை யென்று பொருளல்ல. அவையெல்லாம் தடை செ ய்யப்பட்ட அல்லது முழுமையான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டு முடிவுகள் அறி விக்கப்படாத மருந்துகள் என்பதால் சிகிச்சை  செ ய்வதில்லை. குழந்தைகளின் சளியை அகற்றுவதற்காக சித்த மருத்துவத்தில் ஒரு தயாரிப்பு இருக்கிறது. அதாவது, குப்பை மேனியையும், வேப்பெண்ணையையும் உப் புடன் கசக்கிச் சாறு பிழிந்து, அதில் ஒரு துளியை குழந்தையின் நாவில் தடவினால் போதும். நெஞ்சில் இருக்கும் சளி வெளியே வந்துவிடும். ஆனால் குழந்தை இதனை எதிர்பார்க்காததால், அதற்குப் பிறகு நீ ங்கள் எதற்காகவாவது வாயைத் திறக்கச்சொன் னால் திறக்காது. இம்மாதிரியான மனரீதி யான பின்விளைவுகள் ஏற்படுவதால் குழந் தைகளுக்கு சித்த மருத்துவம் பெரிதாக எத னையும் செ ய்யவில்லை என்றே சொல்ல லாம்.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் உயி ரிழப்புகளை விட, குடியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். எயிட்ஸ் என்னும் உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த நோய் அவரை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருக் கிறது.  ஆனால் குடிக்கு அடிமையானவர்க ளால் அவரது குடும்பமே பாதிப்பிற்குள்ளா கிறது என்பதை உணர்ந்து குடி மற்றும் போதைக்கு அடிமையாகாதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ இப்பழக்கத்திற்கு ஆளாகியி ருந்தால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு, அதிலிருந்து மீண்டு, ஆரோக்கிய மாக வாழ முற்படுங்கள்.