தொண்டைப்புண் புற்றுநோயின் அறிகுறியா

  • Dr.Sanjay
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
தொண்டைப்புண் புற்றுநோயின் அறிகுறியா

உடலியல் சார்ந்த பிரச்சனைகளில் ஐம்புலன்களில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விட்டால் நம்முடைய இயல்பான நடவடிக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, மனதைச் சோர்வடையச் செய்துவிடுகிறது. அத்துடன் நமது முன்னேற்றத்தையும் முடக்கிவிடுகிறது. நீரிழிவு நோய், உடற்பருமன், இதயக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றுடன் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் காது, மூக்கு, தொண்டைப் பகுதிகளில் ஏதேனும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால், நம்மால் இயல்பாகவே இருக்க இயலாது. இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் நேஷனல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், காது, மூக்கு, தொண்டை  மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை நிபுணருமான டொக்டர் சஞ்சயிடம் வாசகர்களின் சந்தேகங்களை முன் வைத்தோம். அதனை ஒவ்வொன்றாக படித்து எமக்கு அளித்த பதில்கள்தான் இவை:

காது, மூக்கு, தொண்டை ஆகிய பகுதிகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான காற்றை மூக்கின் வழியாகத்தான் உள்ளிழுத்துச் சுவாசிக்கிறோம். மற்றொன்று நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான சக்தியை வழங்கும் உணவினை வாய் மூலமாகத்தான் உண்கிறோம். நம்முடைய அத்தியாவசியத் தேவையான காற்று மற்றும் உணவு மூலமாகத்தான் இந்த சுற்று சூழலில் உள்ள மாசு மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்ட்ரீயாக்கள் நம் உடலுக்குள் செல்கின்றன. இதனால் மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. நாம் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் ஒலியலைகளாலும், சுற்றுப்புறத்தில் மற்றவர்களால் உருவாக்கப்படும் ஒலிகளாலும் நம்முடைய காதிற்கும் பாதிப்புகள் ஏற்படு கின்றன. ஆனால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக இவைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன.  நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது இவைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய முறையில் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் விளைவுகள் அதிகமாக இருக்கும்.

தெற்காசியாவைப் பொறுத்தவரை பாதுகாப்பான சுற்றுச் சூழலை உருவாக்கிக் கொள்வதில் நடைமுறைக் குறைபாடுகள் அதிகமாக இருப்பதால், தனி நபர்கள் சுற்றுச் சூழல் மாசு, ஒலி மாசு ஆகியவற்றிலிருந்து தம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும்?

சில நோயாளிகள் எம்மிடம், "எமக்கு எப்போதும் மூக்கடைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றை வராமல் செய்துவிடுங்கள்" என்று கேட்பார்கள். ஆனால் அது சாத்திய மற்றது என்று சொல்வேன். முதுமையடையும்போதோ அல்லது தவறான நடவடிக்கையாலோ காது, மூக்கு தொண்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படுவது இயற்கை. இருப்பினும் பயணத்தின்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே அருந்துவது, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அதற்குரிய முகமூடியை அணிந்து பணியாற்றுவது, வீட்டைத் தூய்மைப்படுத்தும்போது அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்வது, ஒலி அதிகமாக இருக்குமிடத்திற்குச் செல்லாமல் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமாவைப் பூரணமாக குணப்படுத்த இயலுமா?

ஆஸ்துமா என்பது ஒருவித ஒவ்வாமை யினால் ஏற்படுவது தான். மூக்கில் ஒவ்வாமை ஏற்படும் போது மூக்கிலிருந்து நீ ர் வருகிறது. இதனை ஜலதோஷம் என்று குறிப்பிடுவதைப் போல, நுரையிரலில் ஏற்படும் ஒருவித ஒவ்வாமைதான் ஆஸ்துமா வாக வெளிப்படுகிறது. நுரையீரலில் இருக்கும் காற்றறைகளின் செ யல்பாட்டில் ஏற்படும் இடையூறு காரணமா கத்தான் இந்த நி லை உருவா கின்றது. இதனை ஆரம்ப நி லையிலேயே கண்டறிந்து சிகிச்சை  எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நுரையீரலில் உள்ள காற்றறைகள் செ யல் படாமல் போகும் தன்மையிலிருந்து காப்பாற்றப்படுகிறது. இதற்குரிய சிகிச்சை  மேற்கொள்ளாவிட்டால் காற்றறைகள் மூடப் பட்டு, சுவாசிப்பதற்கான செ யல்பாடுகள் குறைந்து, மரணம் ஏற்படுகின்ற சாத்தியமும் உருவாகிறது. எனவே ஆஸ்துமாவைத் தொடக்க நி லையிலேயே கண்டறிந்து சிகிச்சை  எடுத்துக்கொண்டால் பூரணமாகக் குணமடையலாம்.

தொண்டை பகுதியிலும் புற்று நோயின் தாக்கம் உள்ளதாக அறிகிறோம். இதற்குரிய தீர்வு என்ன?

தொண்டை என்பது வாயிலி ருந்து உணவு குழாய் முழுவதும் இருக்கும் பகுதியை குறிக்கிறது. இங்கு வாய்ஸ் பாக்ஸ் என்றழைக் கப்படும் லாவிஸ் என்ற பகுதியில் புற்று நோய்த் தொற்றுகள் ஏற்பட் டால் அதனை மிக விரைவில் இனம் கண்டறியலாம். காரணம் இங்கு புற்று நோய் தொற்று ஏற்பட்டால் குரல் ஒலி உடனே மாற்றமடைந்துவிடும். இங்கு தான் பெரும்பாலோனோர் தவறி ழைக்கிறார்கள். பனி அல்லது மூக்கடைப்பு காரண மாக குரல் ஒலி மாற்றமடைந்துள்ளது என்று கருதிக் கொண்டு மருத்துவ பரிசோதனையை தவிர்த்துவிடுகின்றனர். அதன்பின் பாதிப்பு தொடரவே, பரிசோதனைக்கு வரும்போது, புற்று நோய் பரவியிருக்கும். மருத்துவ உலகைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையில் இருக்கும் தொண்டைப் பகுதி புற்றுநோயைக் குணப்படுத்த இயலும் என்பது நி ரூபிக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உணவை விழுங்குவதற்குச் சிரமமேற்படும். இதனையே அறிகுறியாக எடுத்துக்கொண்டு உடனே மருத்துவரை அணுகி ஆலோச னை பெறுவது அவசியம்.

காதுகளில் தேங்கியிருக்கும் அழுக்கு களை ஒரு பிரிவினர் பாதுகாப்பான முறை யில் அகற்றிட வேண்டும் என்றும், மற்றொரு பிரிவினரோ அதற்குரிய நி புணர்கள் மூலமே தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், வேறொரு பிரிவி னரோ காதுகளை சுத்தப்படுத்த தேவை யில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இதில் எதனைப் பின் பற்ற வேண்டும்?

காதுகளின் வெளிப்புறத் தோல் பகுதியிலிருந்து வெளியாகும் செ க்ரி சினைத்தான் வேக்ஸ் என்றழைக்கிறோம். அதாவது நீ ங்கள் அழுக்கு என்று எதனைப் குறிப்பிடுகிறீர்களோ அதனை நாங்கள் வேக்ஸ் என்று குறிப்பிடுகிறோம். இந்த வேக்ஸ் காதுகளில் இருப்பது நல்ல விளைவைத்தான் தருகின்றது. ஏனெனில் இதில் நோய் எதிர்ப்பு ச க்தி ஓரளவிற்கு உள்ளது. இது காதுகளில் இருப்பதால் சிறிய பூச்சிகள் உள்ளே நுழைவது தடுக்கப் படுகிறது. அதனால் வேக்ஸைச் அகற்ற வேண்டிய அவசியமேயில்லை. இது 95 ச தவீதத்தினருக்குப் பொருந்தும். அதே தருணத்தில் காதுகளில் இருக்கும் அழுக்கு களை தூய்மைப்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு, பட்சை (Buds) வைத்துச் சுத்தம் செ ய்வதன் மூலம் காதின் வெளிப்பகுதி களில் இருக்கும் வேக்ஸை, உள் புறத்திற்குத் தள்ளிவிடுகிறார்கள். இதன் மூலம் உட் புறத்திற்குச் செல்லும் வேக்ஸ், கடினமாகிக் கல் போலாகிவிடுகிறது. மருத்துவர்களை நாடி வரும் நாற்பது ச தவித  நோயாளிகள். தங்கள் காதுகளைத் தாங்களாகவே சுத்தம் செ ய்பவர்களாக இருக்கிறார்கள்.

உடலிலேயே மென்மையான தசை களைக் கொண்ட பகுதி காது. இங்கு நீ ங்கள் செ ய்யும் தவறான செ யல்களால் எலும்பு பகுதிக்கு அருகில் பாக்ட்ரீயாக்களை அறிமுகப்படுத்தி விடுகிறீர்கள். இதனால் பாதிக்கப்படும் பகுதியை மீண்டும் புனர மைக்க நீ ண்ட கால சிகிச்சை  தேவைப்படும். எனவே காதுகளில் இருக்கும் வேக்ஸை சுத்தப்படுத்த வேண்டாம். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். மிக அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே இதனைச் சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்கள் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மருத்துவரை நாடி, அதனைத் தூய்மைப் படுத்திக்கொள்ளலாம்.

தலையில் நீர் கோத்திருப்பதை அகற்றுவதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்மார்களே மூக்கு பொடியைப் பயன்படுத்துவதும், மூக்கடைப்பிற்காகத் தொடர்ந்து இன்ஹேலரை உபயோகப்படுத்துவதும் சரிதானா? இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன?

மூக்கு பொடியைப் பயன்படுத்தும் போது மூக்கில் உள்ள சதை சுருங்கி விடுகிறது. தசைகள் சுருங்கி விடுவதால் தலையில் உள்ள நீர், சளி ஆகியவை வெளியேறுவதற்கான வாய்ப்பு உருவா கிறது. ஆனால் மூக்குப் பொடியில் புகையிலை கலந்திருப்பதால் இவ்வகையான முயற்சியை ஆங்கில மருத்துவம் எதிர்க் கிறது. ஆங்கில மருத்துவத்தால் பரிந்துரைக் கப்படும் மருந்துகள், மூக்கில் விடப் பட்டவுடன் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ச ளியை அகற்று கிறது. மேலும் மூக்குப் பொடியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் அவர் களுக்குப் புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இன்ஹேலரை தொடர்ச்சியாகப் பயன்படுத்து வதும் தவிர்க்கப்பட வேண்டியது தான். தமிழகக் கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு மூக்கில் எண்ணெய் விடுவார்கள். இதுவும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மீறிச் செ யல்படும்போது குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படும்.

மருத்துவ துறையில் சமீப காலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ள சாவித்துவார அறுவை சிகிச்சையினை காது, மூக்கு தொண்டை மருத்துவத்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறதா?

எண்டோஸ்கோப்பை வயிற்றுப் பகுதி களில் பயன்படுத்தும்போது அதனை லோப் ராஸ்கோப் என்றழைக்கிறார்கள். மூட்டு களில் பயன்படுத்தும்போது அதற்கு ஆர்த் ரோஸ்கோப் என்று அழைக்கிறார்கள். இந்த அறுவைச் சிகிச்சை  கண்டுபிடிக்காத வரை அறுவைச் சிகிச்சை  நி புணர்கள் தங்கள் கண் ணால் பார்த்த பகுதியிலும், தீர்மானிக்கிற பகுதியிலும், சில தருணங்களில் அதன் வெளிப்பகுதிகளிலும் அறுவைச் சிகிச் சை யை மேற்கொண்டார்கள். இந்த எண்டோஸ்கோப் வந்த பிறகு துல்லிய மாகவும், தழும்பு மிகக் குறைவாகவும் அறுவைச் சிகிச்சை  செ ய்யப்படுவதால் இதற்குப் பெரிய வரவேற்பிருக்கிறது. மேலும் மருத்துவமனையில் தங்குகிற கால மும் குறைவு என்பதாலும், முதியவர் களுக்கும் இது நல்ல பலனை அளிப்பதாலும் பெரும்பான்மையோர் இதனை விரும்பு கின்றனர். குறிப்பாக மூக்குப் பகுதிகளில் ஏற்படும் சை னஸ் பிரச்ச னைகளில் இருந்து முற்றிலுமாகத் தீர்வு காணஇயலும். காது களில் மைக்றோஸ்கோப் மூலமே அறுவைச் சிகிச்சை  இதுவரை நடைபெற்று வந்தது. தற்போது இதற்கும் இந்த கீ ஹோல் ச ர்ஜரி யை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொண்டைப் பகுதியில் இதனைப் பயன் படுத்த இயலாது. ஏனெனில் தொண்டைப் பகுதி வளைவுகளுடன் இருப்பது.

உங்களுடைய மருத்துவப் பயணத்தில் மறக்க இயலாத அனுபவத்தை எங்க ளுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

ஓராண்டிற்கு முன் அறுபத்தைந்து வய திற்கு மேற்பட்ட பெண்ணிற்கு, மூக்கில் சை னஸ் பிரச்ச னை மூலம் டேஞ்ச ரஸான பஃங்கல் இன்பெக் ச னால் பாதிக்கப்பட்டு, இரத்த குழாய் வழியாக உடலெங்கும் பரவி, பார்வை பறிக்கப்பட்டு, வாத நோயால் அவதிப் பட்டும், உயிருக்கு ஆபத்தான நி லையில் எங்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூக்கில் உள்ள இன்பெக் ச னை முற்றிலுமாக அகற்றி, தொடர்ந்து கண்காணித்து நோயாளியின் உயிரைக் காப்பாற்றி விட்டோம். ஆனால் எங்களால் இழந்த அவரது பார்வையை மட்டும் மீட்க முடியவில்லை.

காது, மூக்கு, தொண்டைப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கும், நீரிழிவு நோய்க்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நோய் எதிர்ப்புச் ச க்தி குறைந்து விடுவதால் காது, மூக்கு ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பிரச்ச னை ஏற்பட்டுவிடும். அத்துடன் அதற்குரிய மருந் துகளும், மாத்திரைகளும் விரைவான பலனையும் கொடுப்பதில்லை. எனவே நீ ரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைத் திருப்பது மிக மிக அவசியம்.

காதினை பட்ஸ் வைத்தோ, அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைத்தோ சுத்தம் செய்யாதீர்கள். மூக்கு பொடி, மூக்கடைப் பிற்கு தற்காலிக நி வாரணம் வழங்கினாலும், அதில் புகையிலை இருப்பதால் புற்று நோயை தோற்றுவிக்கும். வாயில் புண் இருந்து, அதற் மூன்று வார காலத்திற்குள் தீர்வு கிடைக்கவில்லையென்றால், அருகிலுள்ள புற்றுநோய் நிபுணரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

போன்: 0091  44  25240130
இமெயில்: sanurau@hotmail.com